×

மாடியில் இருந்து நாய்க்குட்டியை தூக்கி வீசி கொன்ற சிறுவன்: போலீசார் வழக்கு பதிவு

புதுடெல்லி: டெல்லி அருகே மாடியில் இருந்து நாய்க்குட்டியை சிறுவன் தூக்கி வீசியதில் நாய்க்குட்டி பலியானது. இதில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி அருகே, கிரேட்டர் நொய்டாவில், கவுர் சிட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து சிறுவன் ஒரு நாய்க்குட்டியை தூக்கி வீசியதில் நாய்க்குட்டி பரிதாபமாக இறந்து போனது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து விலங்குகள் நல தன்னார்வ அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

அதில் ‘ 9 அல்லது 10 வயதுள்ள சிறுவனின் கைகளில் சிக்கிய நாய்க்குட்டி தப்பிக்க முடியாமல் இருந்த நிலையில் தூக்கி வீசிய கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.அந்த காட்சிகள் மற்றவர்களையும் இதே போன்று செய்ய தூண்டும் வகையில் உள்ளது. மேலும், அந்த வீடியோவில் பிறந்து ஒருமாதமே ஆன அந்த நாய்க்குட்டியை சிறுவன் பிடித்து கொண்டு மற்ற நாய்க்குட்டிகளிடம் இருந்து மறைத்து எடுத்து செல்கிறான். இதையடுத்து உயரமான மாடியில் இருந்து நாய்க்குட்டியை சிறுவன் தூக்கி வீசினான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post மாடியில் இருந்து நாய்க்குட்டியை தூக்கி வீசி கொன்ற சிறுவன்: போலீசார் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Delhi ,Kaur City ,Greater Noida ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி